யாழ்ப்பாணம் முருகன் கோவில் சம்பவம்: 400ஐ நெருங்கிய கண் பாதிப்புக்கு HID ஒளியே காரணம்!
இதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, சம்பவத்தில் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் கோவிலில் நடைபெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியான HID வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன், தனது வைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு நிலவரப்படி 400ஐ நெருங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இந்நிலையில், இதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, சம்பவத்தில் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர