இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய மறுக்கும் டீசல் கப்பல்?

கட்டணம் செலுத்தப்படாததால் குறித்த கப்பல், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 31, 2022 - 23:24
இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய மறுக்கும் டீசல் கப்பல்?

இலங்கைக்கு அவசியமான டீசலுடன் கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கட்டணம் செலுத்தப்படாததால் குறித்த கப்பல், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பலில் எவ்வளவு டீசல் உள்ளது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள், கட்டணம் செலுத்தப்படும் வரை கப்டன் கப்பலை சர்வதேச கடற்பரப்பில் வைத்திருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் தயாராகிவிட்டது என அரசாங்கம் அறிவித்ததும் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!