பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று (06) காலை பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று (06) காலை பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் சோகம்: பஸ் மீது மரம் விழந்து ஐவர் உயிரிழப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விபத்தில் காயமடைந்த 17 பேரில் ஐவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த ஏனையோருக்கு அவசர விபத்துப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.