இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குகளை எண்ண நடவடிக்கை!
இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணைக்குழு தொடங்கும்...

இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணைக்குழு தொடங்கும் என்றும், வெற்றியாளரின் அறிவிப்பு இன்று பிற்பகுதியில் அல்லது நாளை முற்பகுதி வரை தாமதமாகலாம் என்றும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான இடைவெளி குறைவடைந்து வருகின்றது.
இந்த நிலையில், அநுரகுமார 50.1 சதவீதத்தை எட்டமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி முன்னெடுக்கப்படும் என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என அந்த வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவித்து வருகின்றனர்.