இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 12, 2023 - 14:14
இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதைய போர் சூழலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இஸ்ரேலில் உள்ள பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலில் இருந்து நாடு திரும்புவதற்கு விரும்பும் நபர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!