நீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
நீர் கட்டணம் 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நீர் கட்டணம் 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண குறைப்பினை அடுத்து, நீர் கட்டணத்தை குறைப்பதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், இது குறித்து ஆராய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களுக்குள் அந்தக் குழுவின் அறிக்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் அது தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.