பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்தார்!

இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் வைத்து, குறித்த கான்ஸ்டபிள் தனது T-56 ரகத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்தார்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாணத்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், இன்று (29) அதிகாலை தனது சேவைத் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்துள்ளார்.

இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் வைத்து, குறித்த கான்ஸ்டபிள் தனது T-56 ரகத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் உடனடியாக பாணத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பேராதனை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

⚠️ கவனிக்க: வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களும் தோல்விகளும் நிரந்தரமானவை அல்ல. அவை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அதற்கான தீர்வுகள் எப்போதும் இருக்கின்றன. மனம் வலிக்கும் நேரங்களில் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை. நம்பகமான ஒருவரிடம் மனம் திறந்து பேசுவதும், உதவி கேட்பதும் தைரியத்தின் அடையாளம். உடனடி உதவிக்காக இலங்கை சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற இலவச உதவி இலக்கத்துக்குத் தொடர்புகொள்ளுங்கள். உங்களின் உயிர் மிகவும் மதிப்புடையது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -