நீண்ட விடுமுறை தொடர்பில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 8, 2024 - 15:56
நீண்ட விடுமுறை தொடர்பில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

சித்திரை புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை வழங்க முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

நீண்ட விடுமுறையின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் கழிவுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான பணிகளை செய்து புத்தாண்டை கொண்டாட பொதுத்துறையினருக்கு உறுதுணையாக செயற்பட வேண்டும் எனவும் செயலாளர் தெரிவித்துள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!