உயிரிழந்தாக அறிவிக்கப்பட்ட நபர் மீண்டு வந்த அதிசயம்

அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் கூறிய நிலையில், உல்பேயின் உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
உயிரிழந்தாக அறிவிக்கப்பட்ட நபர் மீண்டு வந்த அதிசயம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது பாண்டுரங் உல்பேக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், குடும்பத்தார் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எனினும், அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் கூறிய நிலையில், உல்பேயின் உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்போது, உறவினர்கள் இறுதிச் சடங்கைச் செய்ய அவர்கள் தயாராகிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவரது உடல் அம்பியுலன்ஸ் வாகனத்தில் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டதுடன், வரும் வழியில் சாலையில் காணப்பட்ட மேட்டில் வாகனம் ஏறியதில் இறந்துபோன உல்பே திடீரென்று விழித்துக்கொண்டுள்ளார்.

இதன்போது, உல்பேயின் விரல்கள் அசையத் தொடங்கியதாக அவரது மனைவி கூறினார். இதனையடுத்து, தம்முடைய இறுதிச் சடங்கிற்குச் செல்லவிருந்த உல்பே மீண்டும் மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், இரண்டு வாரத்திற்குப் பின் உல்பே உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -