முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவைப் பிணையில் விடுவிக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ பிணையில் விடுவிப்பு
ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவைப் பிணையில் விடுவிக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (24) வத்தளை நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவை 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

லங்கா சதொச நிறுவனத்தின் லொறியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைக்கு அமைவாக, ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, அவரது மூத்த மகன் ஜொஹான் பெர்ணாண்டோ, இளைய மகன் ஜெரோம் பெர்ணாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பணியாளர் ஒருவரும் இந்த வழக்கில் சந்தேகநபராக உள்ளார். லொறியின் தவறான பயன்பாடு குறித்த விசாரணைகள் தொடர்வதால், மற்ற சந்தேகநபர்களின் நிலை குறித்தும் எதிர்வரும் விசாரணைகளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -