இன்றும் பல தடவை மழை பெய்யும்; வெளியான அறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் 4 மணிக்குப் பிறகு, ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பெப்ரவரி 2, 2024 - 11:31
பெப்ரவரி 2, 2024 - 11:32
இன்றும் பல தடவை மழை பெய்யும்; வெளியான அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று (02) பல தடவை  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் 4 மணிக்குப் பிறகு, ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன், மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!