ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு : சஜித்தின் உரையால் சூடாகிய சபை... 5 நிமிடங்கள் ஒத்திவைப்பு

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. 

நவம்பர் 21, 2023 - 15:22
ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு : சஜித்தின் உரையால் சூடாகிய சபை... 5 நிமிடங்கள் ஒத்திவைப்பு

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. 

இதுதொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து இன்று உரையாற்றினார்.

அவருடைய உரையை தடுக்கும் வகையில், ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் விளைவித்தனர். அத்துடன், சபைக்கு நடுவே வந்தும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சபையை கொண்டுச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துவிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அக்கிராசனத்தில் இருந்து எழுந்துச் சென்றுவிட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!