புத்தகம் வெளியிடுகிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் சம்பவங்கள் குறித்து தான் எழுதும் புத்தகத்தில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 21, 2022 - 14:31
நவம்பர் 21, 2022 - 14:32
புத்தகம் வெளியிடுகிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

 மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தகமொன்றை எழுதி வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், தான் எழுதியுள்ள புத்தகத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் சம்பவங்கள் குறித்து தான் எழுதும் புத்தகத்தில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் சென்றடையாத சில சம்பவங்கள் தான் எழுதும் புத்தகத்தின் மூலம் வெளிவரும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!