மகனின் கல்லறையில் கதறி, கதறி அழுத தந்தை - ஆர்சிபி கொண்டாட்ட துயரம்

18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 
மகனின் கல்லறையில் கதறி, கதறி அழுத தந்தை - ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதையடுத்து, பெங்களூரில் ஆர்சிபி அணியைப் பாராட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படு்த்திய நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த 19 வயது இளைஞரின் நினைவிடத்தில் அவரது தந்தை கதறி அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

19 வயதான இளைஞர் பூமிக். இவர் ஆர்சிபி-க்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். 

இவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இவரது தந்தை லட்சுமணன் படுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல மறுத்து கதறி, கதறி அழுதார். 

பின்னர். அவரை சிலர் ஆறுதல்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 

ஆர்சிபி-யின் வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், ஆர்சிபி நிர்வாகிகள் உள்பட 4 பேரை பொலிஸார் கைது செய்தனர். 

மேலும், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் மீதும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா நடவடிக்கை எடுத்துள்ளார். 

உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதுடன், ஆர்சிபி நிர்வாகம் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கியது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -