புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளும் இடைநிறுத்தம்

எரிபொருள் விநியோகச் சிக்கலை கருத்தில் கொண்டு, புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளையும் நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அந்த நாள் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளும் இடைநிறுத்தம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளை நடத்துவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் விநியோகச் சிக்கலை கருத்தில் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் நீதிமன்றச் சேவைகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல், மின்சக்தி மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய அரச நிறுவனங்களுக்கு இந்த விசேட விடுமுறை நடைமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT