ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச பாடசாலைகளைப் போலவே அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளும் அந்த நாளில் செயல்பட வேண்டாம் என கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகச் சிக்கலை கருத்தில் கொண்டு, புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளையும் நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அந்த நாள் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கலை கருத்தில் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய இலங்கை அரசு ரஷ்யாவுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ரஷ்ய எண்ணெய் கொள்வனவுக்கான தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.