உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த முதல் இலங்கையர் - வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க! 

இந்த சாதனையின் மூலம், உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த முதல் இலங்கையர் - வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க! 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, உலக ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, புதிய வரலாறு படைத்துள்ளார்.

சர்வதேச தடகள உலகில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில், சமீபத்தில் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ருமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அந்த அபாரமான சாதனையின் பலனாக, உலக தடகள தரவரிசையில் அவர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக தரவரிசைப் பட்டியலின்படி, 1,354 தரவரிசைப் புள்ளிகளுடன் ருமேஷ் தரங்க உலகின் முதல் தர ஆண்களுக்கான ஈட்டி எறிதல் வீரராக உயர்ந்துள்ளார்.

இந்த சாதனையின் மூலம், உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

இது இலங்கை தடகள வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை வீரர்களின் திறமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துக்காட்டும் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர