2027 ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி நேரடியாகத் தகுதி: இலங்கை கிரிக்கெட் சபை உறுதி

இலங்கை தொடரை நடத்தும் நாடாக இல்லாதபோதும், 2027 ஆம் ஆண்டுக்கான அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது
2027 ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி நேரடியாகத் தகுதி: இலங்கை கிரிக்கெட் சபை உறுதி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை போட்டியை நடத்தும் நாடாகச் செயற்படாதபோதிலும், 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முதலாவது ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான நேரடித் தகுதியை இலங்கை மகளிர் தேசிய அணி உறுதிசெய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  

அங்குரார்ப்பண மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடத்தும் ஏற்பாடுகள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, இத்தொடரை இலங்கை நடத்தவில்லை என்றாலும், தற்போதைய தகுதிகாண் தரவரிசை அடிப்படையில் இலங்கை மகளிர் அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.  

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை மகளிர் அணியின் இந்த முக்கிய சாதனையை வரவேற்றுள்ள கிரிக்கெட் சபை, இத்தொடருக்கு முன்னதாக வீராங்கனைகளின் பயிற்சிகள் மற்றும் தயார்படுத்தல்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முழுமையாக வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

அத்துடன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதிசெய்யும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, தொடரை நடத்தும் நாடு மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர