தேசிய அடையாள அட்டைக்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றம்!
தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின்படி,
தேசிய அடையாள அட்டையின் சான்றிதழ் அளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபாய் ஆகும்.
தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கான கட்டணம், ஒன்லைன் முறையில் சமர்பித்தால் 25 ரூபாயாகவும், நேரடி ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையர் ஜெனரலுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட்டால் 500 ரூபாய் ஆகும்.
தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் இக்கட்டணம் 10,000 ரூபாயாக இருந்தது.
பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஆண்டுக் கட்டணம் 2,000 ரூபாயாக இருந்த நிலையில் அது 3,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.