கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு 

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை.

ஒக்டோபர் 19, 2023 - 23:11
கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு 

கொழும்பின் பல பகுதிகளில் வார இறுதியில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை ( 21) மாலை 05.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (22) காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைபடும்.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை. (News21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!