மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம் - பட்டியல் இணைப்பு

ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம் -  பட்டியல் இணைப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் தொடர்பிலான தரவுகளை ஒரு மாதத்திற்குள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பொறியியலாளர் ரோஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமைச்சரவை வழங்கிய அனுமதியின் பிரகாரம், ஜனவரி 15 ஆம் திகதி முதல் வீட்டுப் பாவனை மின்சார அலகிற்கான நிலையான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், 0 -30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 120 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

31-60 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 240 ரூபாயிலிருந்து 550 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

60-90 அலகுகளுக்கான நிலையான கட்டணமும் 90-180 அலகுகள் வரையான நிலையான கட்டணமும் முறையே 650 ரூபாயாகவும் 1500 ரூபாயாகவும் அமைந்துள்ளது.

180 அலகுகளுக்கு மேல் 1500 ரூபாயாக இருந்த நிலையான கட்டணம் 2000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அலகு 0-30 – 400 ரூபாய்

அலகு 31 -90 – 550 ரூபாய்

அலகு 90-120 – 650 ரூபாய்

அலகு 120 – 180 = 1500 ரூபாய்

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -