காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

சிறுவன் வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்தே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜுன் 26, 2022 - 00:03
காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

குளியாப்பிட்டிய மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் கிணறு ஒன்றில் இருந்து 11 வயது சிறுவனின் சடலம் ஒன்று நேற்று (24) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்தே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

23ஆம் திகதி இரவு முதல் சிறுவன் வீட்டில் இல்லாததால், பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து,பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!