சமூக ஊடக இடுகை தொடர்பாக சிறப்புரிமைக் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள பெண்
இத்தகைய நிகழ்வு இலங்கையில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட பதிவுக்காக நபர் ஒருவர் பாராளுடன்ற சிறப்புரிமைகள் குழுவின் முன் அழைக்கப்பட உள்ளார்.
இத்தகைய நிகழ்வு இலங்கையில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.
களுத்துறையைச் சேர்ந்த லலந்தி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு அழைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (01) அறிவித்துள்ளார்.
குறித்த பெண், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தொடர்பில் கருத்து பதிவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.