தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
மொனார்க் இம்பீரியல் (Monarch Imperial) ஹோட்டலில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விஞ்ஞாபனம் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளது.
மொனார்க் இம்பீரியல் (Monarch Imperial) ஹோட்டலில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் இந்தக் கொள்கைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தமது விஞ்ஞாபனத்தில் அதிக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கட்சி கூறியுள்ளது.
பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, வெளிநாட்டு, கலை மற்றும் கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பிற துறைகளின் முக்கிய துறைகளை உள்ளடக்கி இந்த விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.