மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பேரணி: ஐ.தே.க வாழ்த்து மடல்

அநுராதபுரத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பேரணி: ஐ.தே.க வாழ்த்து மடல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது உத்தியோகபூர்வ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. 

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்துக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரசாங்கத்தின் தடைகள் மற்றும் சீர்குலைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பேரணி வெற்றியடைய தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பேரணியானது அதன் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் தலைமையிலேயே முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

எனினும், அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ளதால், மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இப்பேரணி நடைபெறவுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -