பொலிஸ்மா அதிபருக்கு எதிரான அச்சுறுத்தல் கருத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட SLPP பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரானபோதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கைப்பற்றும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.