இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்ட நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கு பகுதியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

டிசம்பர் 29, 2023 - 13:29
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்ட நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கு பகுதியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இலங்கையின் தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சஞ்சய் பெரேரா கூறியுள்ளார்.

எனினும் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழமான கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் அமைந்துள்ள நான்கு நில அதிர்வு அளவீடுகளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!