அனைத்து ஏழை மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்கவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்கவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளும் அதற்கான வழியை சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதமர் கூறினார்.
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கதவு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.