நீர் கட்டணத்துக்கு விரைவில் விலைச் சூத்திரம் அறிமுகம்!

நீரைப் பெற்றுக்கொள்வதற்கு மின்சாரம் தேவைப்படுகின்றமையால் நீர் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

டிசம்பர் 7, 2023 - 13:38
நீர் கட்டணத்துக்கு விரைவில் விலைச் சூத்திரம் அறிமுகம்!

நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார். 

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நீரைப் பெற்றுக்கொள்வதற்கு மின்சாரம் தேவைப்படுகின்றமையால் நீர் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதற்காகவே விலைச் சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!