எரிவாயு விலை குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

மார்ச் 5, 2023 - 14:25
எரிவாயு விலை குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

லிட்ரோ எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (05) வெளியிட்டார்.

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் அதிகரிக்கப்படவிருந்த போதிலும், தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!