நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் கிரிந்த புஹுல்வெல்ல, வெலிகம, மாத்தறை, அக்குரஸ்ஸ, வெலிபிட்டிய, ஹக்மன ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன மற்றும் இம்புல்பே பகுதிகளில் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அலபத்த, கலவான, இரத்தினபுரி, அயகம, அஹெலியகொட, கிரியெல்ல, குருவிட்ட, பெல்மடுல்ல மற்றும் நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெரணியகல மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும், தெஹியோவிட்ட, யட்டியந்தோட்டை மற்றும் கேகாலை முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேசத்தில் இரண்டாம் நிலை மற்றும் எல்பிட்டிய பிரதேசத்திற்கான முதலாம் மட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பலஸ்முல்ல பிரதேசத்தில் விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சீதாவக்க, மத்துகம, வல்லவிட்ட, புலத்சிங்கள மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேசத்தில் விடுக்கப்பட்ட இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.