பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய மறுப்பு?
கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (07) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (07) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்து உள்ளார்.
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான விசாரணையை அடுத்து, முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.