ஜனாதிபதி ரணிலை சந்தித்து பேசினார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசினார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசினார்.
இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.