மலையகத்தில் மரக்கறிகளின் விலை உயர்வு
தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகிப் போவதற்கான ஆபத்து உள்ளதாக, இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகிப் போவதற்கான ஆபத்து உள்ளதாக, இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாகவே தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்பட்டிருக்கும். ஆனால், இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகள் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
மரக்கறிகளின் விலை விவரம்
லீக்ஸ் ஒரு கிலோகிராம் விலை – 200 ரூபாய்
பாவக்காய் ஒரு கிலோகிராம் விலை – 200 ரூபாய்
வெண்டிக்காய் ஒரு கிலோகிராம் விலை – 190 ரூபாய்
புடலங்காய் ஒரு கிலோகிராம் விலை – 180 ரூபாய்
தக்காளி ஒரு கிலோகிராம் விலை – 360 ரூபாய்
கோவா ஒரு கிலோகிராம் விலை – 320 ரூபாய்
கறிமிளகாய் ஒரு கிலோகிராம் விலை – 480 ரூபாய்
கத்திரிக்காய் ஒரு கிலோகிராம் விலை – 250 ரூபாய்
நுவரெலியா உருளை கிழங்கு ஒரு கிலோகிராம் விலை – 290 ரூபாய்
போஞ்சி ஒரு கிலோகிராம் விலை – 600 ரூபாய்
பச்சைமிளகாய் ஒரு கிலோகிராம் விலை – 500 ரூபாய்
கரட் ஒரு கிலோகிராம் விலை – 440 ரூபாயிலிருந்து 480 ரூபாய்வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.
(க.கிஷாந்தன்)