நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அதன் விலையை உயர்த்தியுள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அதன் விலையை உயர்த்தியுள்ளது.
இதன்படி, ஒக்டேன் (92) பெட்ரோல் லிட்டர் 338 ரூபாயாகவும், ஒக்டேன் (95) லிட்டருக்கு 373 ரூபாயாகவும், ஒட்டோ டீசல் லிட்டர் 289 ரூபாயாகவும், சூப்பர் டீசல் லிட்டர் 329 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
லங்கா IOC நிறுவனம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், பெற்றோலிய கூட்டுதாபனமும் விலையை அதிகரித்துள்ளது.