முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது 

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்தார்.

பெப்ரவரி 3, 2024 - 00:54
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது 

தரமற்ற ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்தார்.

சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து  கொள்வனவு வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!