காலாவதியாகும் கடவுச்சீட்டுகள்: முன்பு அறிவித்தது போல் நீட்டிப்பு இல்லை

ஜூலை 01 ஆம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படாது

ஜுலை 9, 2024 - 15:40
ஜுலை 9, 2024 - 22:55
காலாவதியாகும் கடவுச்சீட்டுகள்: முன்பு அறிவித்தது போல் நீட்டிப்பு இல்லை

ஜூலை 01 ஆம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

காலாவதியான கடவுச்சீட்டுகளின் செல்லுபடியை ஒரு வருடத்திற்கு நீடிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜூலை 01 ஆம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படும் என அண்மையில் தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு நவம்பரில் அமுலுக்கு வரவுள்ள இ-பாஸ்போர்ட் முறையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக பாஸ்போர்ட்டின் 10 வருட செல்லுபடியாகும் காலம் முடிந்துவிட்டால், இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் வரை கூடுதலாக ஒரு வருட அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய, அத்தகைய கடவுச்சீட்டு நீடிப்பு அல்லது சலுகைக் காலங்கள் வழங்கப்பட மாட்டாது என்று கூறினார்.

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் காலாவதியானவர்களுக்கு வழமையான கடவுச்சீட்டுகளை வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!