பரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம் - ஆசிரியர் பணி இடை நீக்கம்!
பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வடமத்திய மாகாண கல்விச் செயலாளரால் குறித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்தில் இந்த மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த 6 மற்றும் 7 ஆம் வகுப்பு புவியியல் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் அடுத்த 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என்று வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.