மின்சார கட்டணம் குறைப்பு - வெளியான அறிவிப்பு
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
0-30 யூனிட் ஒன்றின் விலை எட்டு ரூபாயிலிருந்து ஆறு ரூபாயாகவும் மற்றும் 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு 20 ரூபாயிலிருந்து ஒன்பது ரூபாயாகவும் அத்தோடு 60-90 அலகுகள் 30 ரூபாயிலிருந்து 18 ரூபாயாகவும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.