தேர்தல் சட்டங்களை மீறிய மேலும் 8 வேட்பாளர்கள் கைது
கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பான சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், நேற்று (04) காலை 6 மணி முதல் இன்று (05) காலை 6 மணி வரை ஐந்து கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
குறித்தக் காலகட்டத்தில் 204 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக பொலிஸரால் 46 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
2025 உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல் சட்டங்களை மீறியதற்காக கடந்த 24 மணி நேரத்திற்குள் மொத்தம் எட்டு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.