கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல் ஆரம்பம்
2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
இது தொடர்பான அறிவித்தல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் இணையவழி முறையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியானவர்கள் தேர்வும் இம்முறை இணையவழி ஊடாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 12 மணிக்குப் பிறகு இணையவழி ஊடாக விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்ப காலம் 05.04.2024 அன்றுடன் நிறைவடைவதாக கூறப்பட்டுள்ளது.