மர்மமான முறையில் இளம் யுவதி படுகொலை
இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இரத்தினபுரியில் மீட்கப்பட்டுள்ளார்.

இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இரத்தினபுரியில் மீட்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரியில் நிரியல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை 6.30 மணியளவில் குறித்த யுவதி தனது பணியிடத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர், அவரது அலைபேசி செயற்படாத நிலையில், வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள வடிகான் ஒன்றின் கீழ் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த யுவதி ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் படித்து சில மாதங்களுக்கு முன்பு பட்டம் பெற்றார். தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.