வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான புதிய அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

செப்டெம்பர் 14, 2024 - 10:59
வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான புதிய அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் முதல் பல கட்டங்களாக வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

அதனையடுத்து, டிசெம்பர் முதலாம் திகதியிலிருந்து வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் கார்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!