கடல் அலையில் சிக்கிய மூவர் மாயம்
கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கடல் அலையில் சிக்குண்டு மாயமாகியுள்ளனர்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கடல் அலையில் சிக்குண்டு மாயமாகியுள்ளனர்.
55 வயதான தாய், 16 வயதான மகன் மற்றும் 22 வயதான மருமகன் ஆகியோரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியிலுள்ள விஹாரைகக்குச் சென்றிருந்த ஒரு குழுவினர், அங்கிருந்து கடலுக்கு சென்றுள்ளனர். அதன்போதே இம்மூவரும் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.