மனித கடத்தல் விவகாரம்: குஷானுக்கு பிணை

டிசம்பர் 13, 2022 - 18:40
மனித கடத்தல் விவகாரம்: குஷானுக்கு பிணை

மனித கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதான, ஓமான் தூதுவராலயத்தின் மூன்றாம் செயலாளர் பிணையில் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார்.  

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவர், பிணையில் இன்று (13) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஓமானில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் மூன்றாம் செயலாளராக பணியாற்றி ஈ.குஷான் என்பவ​ரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  

அங்குள்ள பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களில் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!