மண்வெட்டியால்  தாக்கப்பட்டு பெண் கொலை

விவசாய நிலத்திற்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடு வலுவடைந்ததில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மண்வெட்டியால்  தாக்கப்பட்டு பெண் கொலை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கஹடகஸ்திஹிலிய – மஹபொத்தான பகுதியில் நேற்றிரவு(03) மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விவசாய நிலத்திற்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடு வலுவடைந்ததில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மருமகனால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் உயிரிழந்துள்ளார். கஹடகஸ்திஹிலிய – மஹபொத்தான பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 31 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கஹடகஸ்திஹிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -