ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி எங்கு இருந்தார்?

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 2, 2022 - 00:15
ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி எங்கு இருந்தார்?

நேற்றைய தினம் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது, அங்கு ஜனாதிபதி இருந்தாரா என்பது தொடர்பிலான தகவல்களை தன்னால் வெளியிட முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரச தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் நடமாட்ட விடயங்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் அவ்வாறு வெளியிடுவது சரியான விடயம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!