துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

ஹம்பேகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஏப்ரல் 13, 2024 - 12:50
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

ஹம்பேகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (12) இரவு ஹம்பேகமுவ சீனுகல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த இருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டின் உரிமையாளரும் அவரது உறவினர்களும் விருந்தில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், 24 வயது மற்றும் 42 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹம்பேகமுவ மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!