இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களின் கிடங்கில் இந்த மூன்று சந்தேகநபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. 

ஒக்டோபர் 30, 2025 - 09:56
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூவர், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள், இந்திய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ஊடக அறிக்கைகளின்படி, மூன்று நபர்களும் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்தனர். அவர்கள் சுமார் 15 நாட்களுக்கு முன்பு படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தனர்.

இந்தியா வந்தவுடன், அவர்களிடம் நாட்டில் தங்குவதற்கான எந்த சட்டப்பூர்வ ஆவணங்களும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நபர்கள் இலங்கையில் பல சட்ட வழக்குகளை எதிர்கொள்கின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களின் கிடங்கில் இந்த மூன்று சந்தேகநபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. 

அந்த சம்பவத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களின் கிடங்கு உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!