10 சதவீதம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 4, 2023 - 13:11
10 சதவீதம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

நாட்டின் மொத்த சனத் தொகையில், 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் மின்சார நுகர்வோர்களாக உள்ளனர்.

அவர்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு தற்போது சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதாவது, மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. 

மொத்த மின்சார பாவனையாளர்களில் சுமார் 65 இலட்சத்துக்கும் அதிகமானோர் திட்டமிட்டபடி மின் கட்டணத்தைச் செலுத்தி வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணமாக, நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்துவதற்கு 45 நாட்கள் கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!